திருவிழா சேவைகள்


நம் மடத்தில் தெய்வங்கள் , ஆழ்வார்கள் , ஆச்சாரியர்களின் திருநட்சத்திரங்கள் மற்றும் நம் சம்பிரதாயத்தில் பின்பற்ற படும் அனைத்து விழாக்களும் நடைபெறும்.

பொதுவாக நம் மடத்து விழாக்களில் கடைபிடிக்கபட்டு வருவன

  • பாராயணங்கள்
  • திருமஞ்சனம்
  • திருவாராதனம்
  • சேவாகாலம்
  • தீர்த்தம் சடாரி
  • அனுக்ரஹ பாஷனம்
  • ததியாராதனை

ஸ்ரீரங்கம் மடத்தில் நடைபெறும் விழாக்கள்:

  • ஸ்ரீ ஜெயந்தி, ஸ்ரீ ராம நவமி மற்றும் ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி போன்ற தெய்வ திருநட்சத்திர வைபவங்கள்
  • உடையவர், முதலியாண்டான், மணவாள மாமுனிகள் போன்ற ஆச்சாரிய புருஷர்களின் திருநட்சத்திர வைபவங்கள்
  • உலகம் போற்றும் உடையவரின் மாதந்தோறும் வரும் திருவாதிரை திருநட்சத்திரங்களில் நம் ஸ்ரீரங்கம் மடத்தில் விசேட திருமஞ்சனம் நடைபெறும்.
  • மணவாள மாமுனிகள் மாதந்தோறும் வரும் மூலம் திருநட்சத்திரங்களில் நம் ஸ்ரீரங்கம் மடத்தில் விசேட திருமஞ்சனம் நடைபெறும்
  • குருபூர்ணிமா, நவராத்திரி, விஜயதசமி, தீபாவளி, தனுர் மாதம், திருஅத்யனம் மற்றும் பொங்கள் போனற வைபவங்கள்
  • நம் பாரம்பரிய விரதங்களான ஏகாதசி , த்வாதசி மற்றும் அமாவாசை போன்றவைகளும் கடைபிடிக்கப்படும்.

பொன்னடி சாத்துதல்



நம் ஆச்சார்ய புருஷர்கள் நம் குடிகளுக்கே வந்து பொன்னடி சாற்றுவது என்பது எவ்வளோ என்பதை வார்த்தைகளால் விவரிக்க இயலுமா ?

நம் ஜீயர் ஸ்வாமிகள் தமது சிஷ்யர்கள் மற்றும் அபிமானிகள் குடிகளுக்கு ஏழுந்தருள விண்ணப்பிதால் ஸ்வாமிகள் பயணம் அவ்வழி இருந்து கால அவகாசம் இருக்கும் என்றால் ஸ்வாமிகள் தங்கள் குடிகளுக்கு ஏழுந்தருளி அருளாசி வழங்குவார்கள்.