“ யாவருக்குமாம் இறைவற்கொரு பச்சிலை யாவருக்கு மாம் பசு வுக்கொரு வாயுறை யாவருக்கு மாம்உண்ணும் போததொரு கைப்பிடி யாவருக்கு மாம்பிறர்க் கின்னுரை தானே ”
ஸ்ரீ விகாரி வருடம் தைத்திங்கள் 2-ஆம் நாள் (16.01.2020) வியாழக்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி அகிலாண்டபுரம் கிராமத்தில் ஸ்ரீ சடகோப இராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் மேல்கோட்டை, கோயம்புத்தூர் நாராயண ஜீயர் ஸ்வாமிகள் மற்றும் நம் ஜீயர் ஸ்வாமிகளும் அத்வைத சன்யாசிகள் இரமானந்த மகராஜ் ஸ்வாமிகள் மற்றும் அத்வைதானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் அனைவர் முன்னிலையில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் “ஸ்ரீ செங்கமலம் இராஜகோபாலன் கோசாலை” துவங்கப்பட்டது.
“ யாவருக்குமாம் இறைவற்கொரு பச்சிலை யாவருக்கு மாம் பசு வுக்கொரு வாயுறை யாவருக்கு மாம்உண்ணும் போததொரு கைப்பிடி யாவருக்கு மாம்பிறர்க் கின்னுரை தானே ”
பரம்பொருளை பூசிக்க ஓர் பச்சிலை (வில்வ இலை)பசுமாட்டிற்கு கொஞ்சம் புல், தான் சாப்பிடும் போது பசித்தவருக்கு ஒரு பிடி சோறு,பிறர் மனம் நோகத வண்ணம் இனிமயான இன்சொல் பேசுவதே – என்று திருமூலர் பட்டியல் இடுவதில் ஆவிற்கு அளிக்கும் கடைமையும் நமக்கு சுட்டி காட்டுகின்றார்.
நம் கோசாலை பராமரிப்பில் தாங்களும் பங்கு கொள்ள இங்கே சொடுக்கவும்