MANNARGUDI JEEYAR MUTT

மடம் தகவல்

அஷ்டதிக் கஜங்கள்:
  • 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்)
  • 2. பட்டர்-பிரான் ஜீயர்
  • 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர்
  • 4. கோவில் அண்ணா
  • 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா
  • 6. எறும்பியப்பா
  • 7. அப்பிள்ளை
  • 8. அப்புள்ளார்

இவர்களை பற்றி வைணவ சம்பிரதாயத்தில் அறியாதோர் இல்லை, நம் மணவாள மாமுனிகளால் நியமிக்கப்பட்ட இவ் அஷ்டதிக் கஜங்களை தவிர

  • 1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மடம்
  • 2. திருமலை சின்ன ஜீயர் மடம்
  • 3. காஞ்சிபுரம் அழகியமணவாள ஜீயர் மடம்
  • 4. ஸ்ரீபெரும்புதூர் எதிராஜ ஜீயர் மடம்

மற்றும் நம் ராஜமன்னார்குடி செண்டலங்கார ஜீயர் மடம் என்று நம் பெரிய ஜீயரால் நியமிக்கப்பட்ட மடங்களில் நம் செண்டலங்கார ஜீயர் மடமும் ஒன்று.

சிறப்பு

சோழதேச நாட்டுத்திவ்யதேசம் நாற்பதில் திருவரங்கம் சார்ந்த திருக்கோழியூர்(உறையூர்), திருக்கரம்பனூர்(உத்தமர் கோயில்), திருவெள்ளறை, திருப்பேர்நகர்(கோயிலடி), திருவன்பில் போன்ற திவ்யதேசங்களை தவிர ஏனைய திவ்யதேசங்களுக்கென்று இருந்த ஒரே ஜீயர் மடம் என்றால் நம் மணவாள மாமுனிகள் நியமித்த நம் ராஜமன்னார்குடி செண்டலங்கார ஜீயர் மடம் மட்டுமே!.

ஜீயர் ஸ்வாமிகள்

மன்மத வருடம் 2015 ஆம் ஆண்டு ஆனித்திங்கள் 16ஆம் நாள்(01-07-2015) ஸ்ரீபெரியஜீயரின் திருநட்சத்திரமான மூலம் திருநட்சத்திரம் பௌர்ணமி திதி கூடிய நன்னாளில் அமிர்த யோகத்தில் தற்போது அரித்திரா நதி வடகரையில் உள்ள செண்டலங்கார ஜீயர் மடத்தின் பீடத்திற்கு சம்பத்குமார ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் ஸ்ரீ செண்டலங்கார செண்பகமன்னார் சம்பத்குமார ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகளாக பீடாரோகணம் நடைபெற்றது.

மேலும் அறிக

சேவைகள்


ஆன்மீக சேவைகள்

நம் ஜீயர் ஸ்வாமிகளடம் பஞ்சசம்ஸ்காரம் செய்துக்கொண்டோர் இந்த பாரத தேசம் முழுவதும் உள்ளனர்

கல்வி சேவைகள்

பள்ளி குழந்தைகளுக்கு நோட் மற்றும் எழுதுபொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

திருவிழா சேவைகள்

பாராயணங்கள், திருமஞ்சனம், திருவாராதனம், சேவாகாலம் மற்றும் பல விழாக்களும் கடைபிடிக்கபடுகின்றன

சமூக சேவைகள்

நம் மடம் ஸ்ரீ ராமானுஜ பார்வைகள் 1000 பணிகள் 10000 என்ற அறக்கட்டளை மூலமா எண்னற்ற சமூக பணிகள் ஆற்றி வருகின்றன.

கோசாலை

ஸ்ரீவிகாரி வருடம் தைத்திங்கள் 2-ஆம் நாள் (16.01.2020) வியாழக்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி அகிலாண்டபுரம் கிராமத்தில் ஸ்ரீ சடகோப இராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் மேல்கோட்டை, கோயம்புத்தூர் நாராயண ஜீயர் ஸ்வாமிகள் மற்றும் நம் ஜீயர் ஸ்வாமிகளும் அத்வைத சன்யாசிகள் இரமானந்த மகராஜ் ஸ்வாமிகள் மற்றும் அத்வைதானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் அனைவர் முன்னிலையில் 20ஏக்கர் நிலப்பரப்பில் “ஸ்ரீ செங்கமலம் இராஜகோபாலன் கோசாலை” துவங்கப்பட்டது.

  • வயது முதிர்ந்த நாட்டு மாடுகள் பராமரிக்கப்படும்
  • கறவை இல்லாத மாடுகளை எங்களிடம் கொடுக்கலாம்
  • தீவனம் பற்றாக்குறை உள்ள மாடுகள் இருந்தாலும் எங்களிடம் கொடுக்கலாம்
  • கோ பூசைக்கான மாடு மற்றும் கன்றுகளை தத்தெடுத்தல்
  • செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கோபூசை நடைபெறும்
“யாவருக்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவருக்கு மாம் பசு வுக்கொரு வாயுறை
யாவருக்கு மாம்உண்ணும் போததொரு கைப்பிடி
யாவருக்கு மாம்பிறர்க் கின்னுரை தானே”

பரம்பொருளை பூசிக்க ஓர் பச்சிலை (வில்வ இலை)பசுமாட்டிற்கு கொஞ்சம் புல், தான் சாப்பிடும் போது பசித்தவருக்கு ஒரு பிடி சோறு,பிறர் மனம் நோகத வண்ணம் இனிமயான இன்சொல் பேசுவதே – என்று திருமூலர் பட்டியல் இடுவதில் ஆவிற்கு அளிக்கும் கடைமையும் நமக்கு சுட்டி காட்டுகின்றார்.

ஸ்ரீ வைஷ்ணவம்

நமது ஸ்ரீ வைஷ்ணவ குரு பரம்பரையானது ஸ்ரீ பெரிய பெருமாள் , ஸ்ரீ பெரிய பிராட்டியார் தொடங்கி ஸ்ரீ.ஸேனை முதலியார் முதற்கொண்டு ஸ்வாமி ஸ்ரீ. மணவாள மாமுனிகள் ஈறாக முற்றுப் பெரும்.

ஆழ்வார்கள் தம்முடைய தமிழ் பாசுரங்களால் வைணவ சமயக் கடவுளான திருமாலைப் போற்றி பாடி மகிழ்ந்தவர்கள். திருமாலின் அடியவர்களான ஆழ்வார்கள் திருமாலின் பெருமையும், தமிழின் சிறப்பினையும் உலகுக்கு உணர்த்தியவர்கள். வடமொழியில் உள்ள வேதங்களுக்கு இணையாக இவர்களின் பாசுரங்கள் போற்றப்படுகின்றன. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது. ஆழ்வார்களின் காலம் ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை என்று கருதப்படுகிறது.

ஸ்ரீ பெரும்பூதூரைச் சேர்ந்த கேசவசோமாயாஜி என்பவருக்கும், பெரிய திருமலை நம்பியின் மூத்த சகோதரியுமான காந்திமதிக்கும் புத்திரனாக , சித்திரை மாதம், திருவாதிரை நக்ஷத்திரத்திலே அவதரித்தார். இளம் வயதிலேயே குருவிடம், குரு உபதேஸங்களையும், வேத சாஸ்திரங்களையும் ஐயம் திரிபுற கற்று, எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவரின் 16 வது வயதிலே தஞ்சமாம்பாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஆழ்வார்கள் திருமாலின் பக்தியில் - அன்பில் - அருளில் - தோற்றத்தில் ஆழ்ந்தவர்கள் எனலாம். ஆழ்வார்கள் என்பது காரணப் பெயராகவும் அவர்கள் தொழிலால் பெற்ற பெயராகவும் கொள்ளலாம். திவ்வியப் பிரபந்தத்தைப் பாடி அருளியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். அவர்களை ஆழ்வார்கள் பன்னிருவர் என்றும் வழங்குவர்.